உக்ரைன் ஆயுதப் படைகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.
உக்ரைன் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது உக்ரைன் ராணுவத்தில் 75,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 55,000-க்கும் அதிகமானோர் நேரடி ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பெண் போராளிகளின் எண்ணிக்கை 7,000 வரை அதிகரித்துள்ளது.
ரசிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும் பெண்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த சிர்ஸ்கி, நாட்டைப் பாதுகாப்பது ஆண்களின் வேலை மட்டுமே என்ற கருத்தை உக்ரைனியப் பெண்கள் மாற்றியமைத்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். கடந்த 12 ஆண்டுகாலப் போரில் 1,705 பெண் வீரர்கள் உயரிய அரசு விருதுகளைப் பெற்றுள்ளனர். மேலும் ஐந்து பெண் வீரர்களுக்கு ‘உக்ரைனின் நாயகர்’ என்ற மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் மூவருக்கு மறைவிற்குப் பின் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராணுவத்தில் உள்ள அதிகாரிகளில் 21 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெறும் 4 சதவீதமாக மட்டுமே இருந்தது. உக்ரைனியப் பெண்கள் போர்க்களத்தில் வீரர்கள், தளபதிகள், மருத்துவர்கள், தகவல் தொடர்பு நிபுணர்கள் மற்றும் உளவுப் பிரிவு அதிகாரிகளாக ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றி வருகின்றனர். உக்ரைனிய சட்டப்படி பெண் வீரர்களுக்குத் தனிப்பட்ட தங்கும் வசதிகள் மற்றும் கர்ப்பகாலச் சலுகைகள் போன்ற கூடுதல் சமூகப் பாதுகாப்பு உத்தரவாதங்களும் வழங்கப்படுகின்றன.
உக்ரைன் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து Kyiv Net இணையதளத்தைப் பாருங்கள்: https://kyivnet.com/
#kyivNews #ukiraineNews #ArmedForcesOfUkraine #WomenInMilitary #OleksandrSyrskyi #InternationalWomensDay #GenderEquality #HeroOfUkraine #DefenseForce #KyivNet #TamilNews

